Trichy Kaveri Murasu
kaveri murasu ad

தமிழ்நாட்டில் 95 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம்

0 21
kaveri murasu ad

 

தமிழ்நாட்டில் 95 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம்

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக, தகுதியற்ற பதிவுகளை நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக, 95 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

மேலும், தகுதி உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ள வசதியாக, வாக்குச்சாவடி வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள் மூலம் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை பொதுமக்கள் எளிதாக மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும் புதுப்பித்ததாகவும் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை விளக்கமளித்துள்ளது.
[19/12, 7:37 pm] Trichy News நியூஸ்: திருச்சியில் SIR சிறப்பு திருத்தப் பணிகள்: 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட SIR (Special Intensive Revision) சிறப்பு திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் 3,31,787 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வ தகவலின்படி,
SIR தொடங்குவதற்கு முன் திருச்சி மாவட்டத்தில் 23,68,967 வாக்காளர்கள் இருந்த நிலையில்,
SIR முடிவடைந்த பின் அந்த எண்ணிக்கை 20,37,180 ஆக குறைந்துள்ளது.

இதன் மூலம், மொத்த வாக்காளர்களில் 14.01 சதவீதம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு மற்றும் தகுதி இல்லாத பதிவுகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தகுதியுள்ளவர்கள் தங்களது பெயர் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.