

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் 26 2 2026 அன்று மாலை 4 மணியளவில் மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட துறை சார்பில் மாவட்ட குழந்தை திட்ட அலுவலர் நித்தியா தலைமையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மகா பேரணி நடைபெற்றது. பேரணியில் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணன், புள்ளியில் ஆலோசகர் முருகேசன் காவல் உதவி ஆய்வாளர் முத்துராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 250 அங்கன்வாடி பணியாளர்கள் பேரணியில் பங்கு பெற்றனர்.
பேரணி மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தற்காலிக பேரூராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.
100% வாக்குப்பதிவு வலியுறுத்தி பேரணியில் பங்கு பெற்றோர் பதாகை ஏந்தி பொதுமக்களுக்கு வாக்குப்பதிவின் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.