Trichy Kaveri Murasu
kaveri murasu ad

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு

0 27
kaveri murasu ad

காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளதால், திருச்சி நீர் வளத்துறை செவ்வாய்க்கிழமை இரவு முதல் உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட்டுள்ளது.

புதன்கிழமை இரவு நிலவரப்படி, முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 27,585 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவு இயல்பானது என்றும், கொள்ளிடம் ஆறு 2 லட்சம் கன அடி வரை கையாளும் திறன் கொண்டது

மேட்டூர் அணை ஏற்கனவே நிரம்பிவிட்டதால், காவிரி ஆற்றில் வரும் உபரி நீர் முக்கொம்பு மேலணைக்கு அனுப்பப்படுகிறது.

அடுத்த சில நாட்களுக்கு இரு ஆறுகளிலும் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.