

தமிழ்நாடு மின்சார வாரியம் திருச்சி பகிர்மான வட்டம் பெருநகரம் திருச்சி களப்பணியாளர்கள் கேங்மேன் ஆகியோர்களுக்கு பணி பாதுகாப்பு வகுப்பு 12-08-25 அன்று அந்தந்த உபகோட்டம் மற்றும் பிரிவு அலுவலகங்களில் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி மின் பொறியாளர் ஆகிய அலுவலர்களால் நடத்தப்பட்டது. வரும் நாட்களில் பருவ மழை தொடங்க இருப்பதால் பாதுகாப்பாக பணிபுரிவது எப்படி? எந்தெந்த உபகரணங்களை எந்தெந்த நேரத்தில் எப்படி பயன்படுத்துவது பற்றியும் பாதுகாப்பு வகுப்பில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விபத்து ஏற்படாமல் பாதுகாப்புடன் வேலை செய்வது குறித்தும், பொதுமக்கள் நலனை முன்னிட்டு குறுகிய காலத்தில் மின்தடங்கலை சரி செய்வதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகரத்திற்குட்பட்ட கீழ்கண்ட 21 உப கோட்டங்கள் துவாக்குடி, ராக் போர்ட், தென்னூர், திருவரங்கம், சமயபுரம், மண்ணச்சநல்லூர், மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, முசிறி, வடக்கு தாத்தையங்கார்பேட்டை, தெற்குத் தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம், துறையூர், வடக்கு துறையூர், தெற்கு துறையூர், மேற்கு துறையூர், கொப்பம்பட்டி, உப்பிலியபுரம் ஆகிய உப கோட்டங்களில் வகுப்புகள் நடத்தப்பட்டன. பாதுகாப்பு வகுப்பில் 628 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.