Trichy Kaveri Murasu
kaveri murasu ad

முசிறி:தா.பேட்டையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் துவக்க விழா

அமைச்சர் கே என் நேரு பயன்பாட்டிற்க்கு துவக்கி வைத்தார்

0 134
kaveri murasu ad

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம்  தாத்தையங்கார்பேட்டையில் 14-09-25 அன்று காலை புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அரசுப்பணிகள் பயன்பாட்டிற்கு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் அமைச்சர் கே என் நேரு.

சுமார் 3.64 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பரந்து விரிந்த நிலப்பரப்பில் இரண்டடுக்கில் கட்டப்பட்டு கடந்த மாதங்களில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து விடுபட்ட பணிகள் முடிந்த நிலையில் 14/9/2025 அன்று காலை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு அரசு பயன்பாட்டிற்கு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், திட்ட இயக்குனர் கங்காதாரணி சட்டமன்ற உறுப்பினர் ந. தியாகராஜன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தோணி தாஸ், குணசேகரன் மற்றும் தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னாள் கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஊராட்சி செயலர்கள் அரசு அலுவலர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அசைவ பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.