Trichy Kaveri Murasu
kaveri murasu ad

திருச்சி துறையூரில் ₹5000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

0 10
kaveri murasu ad

துறையூர் அருகே கூலித் தொழிலாளிக்கு வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை திருச்சி லஞ்ச ஒழிப்பு 5-01-26 அன்று போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சபெருமாள்பட்டி வடக்கு வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட வைரபெருமாள் பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் தாயார் கடந்த மாதம் ஏழாம் தேதி இறந்து விட்டார் இதைத்தொடர்ந்து அந்த கூலி தொழிலாளி வாரிசு சான்றிதழ் கேட்டு தகுந்த ஆவணங்களுடன் கடந்த 24ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார் இது தொடர்பாக கடந்த 31ஆம் தேதி பச்சபெருமாள் பட்டி வடக்கு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் பிரபு (வயது 42) என்பவரை அந்த கூலி தொழிலாளி நேரில் சந்தித்து விசாரித்துள்ளார். அதற்கு பிரபு 6000 லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார். அதற்கு தான் கூலி வேலை செய்வதாகவும் தன்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று அவர் கூறவே பிரபு ஆயிரம் குறைத்துக்கொண்டு ஐந்தாயிரம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கூலித் தொழிலாளி கடந்த இரண்டாம் தேதி லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கூலித் தொழிலாளியிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும்படி கூறி அரசு சாட்சி ஒருவருடன் அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கிராம நிர்வாக அலுவலகம் சென்று மாறுவேடத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கூலித் தொழிலாளியிடம் கிராம நிர்வாக அதிகாரி பிரபு ஐந்தாரத்தை லஞ்சமாக வாங்கினார் உடனே அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரபுவை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் துறையூர் இராமலிங்க நகரில் உள்ள பிரபுவின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். துறையூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்று கைதானது துறையூர் பகுதிகளில் மிகவும் பரபரப்புக்குள்ளானது.
பாசத்தையும் அரசு அதிகாரிகள் ஏழை மக்களிடம் லஞ்சம் வாங்கி கைதாகும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது காரணம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை இல்லாததே எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அவர்கள் லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே லஞ்சம் வாங்கும் நிலை முடிவுக்கு வரும் ஏழைகள் வாழ்வும் விடியும் எனவும் கூறுகின்றனர்.
Leave A Reply

Your email address will not be published.