

திருச்சி மாவட்டம் துறையூர்: மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக02. 08 .2025 சனிக்கிழமை அன்று புத்தனாம்பட்டி 110/22-11KV துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், T.களத்தூர், புலிவலம், தேனூர்,பெரகம்பி, எதுமலை,தேவிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் திரு.பொன். ஆனந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.