

இன்று(26.05.2026) திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் புலிவலம் மற்றும் வெளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் சார்பில் CANCER SUPPORT INITIATIVE திட்டத்தின் கீழ் புற்றுநோய் தடுப்பு மற்றும் மனம் உடல்நிலை ஆரோக்கியம் குறித்து கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ அலுவலர் டாக்டர்.ரேணுகா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் கிராமப்புற பகுதி நேர செவிலியர் உஷாராணி,SHN அவர்கள் கிராமப்புற பொது மக்களுக்கு புற்றுநோய் மற்றும் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியினை ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கி.முருகையா ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அன்னமேரி,VHN மற்றும் ராஜகுமாரி,VHN இருவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.