Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் மற்றும் புத்தனாம்பட்டி கோட்டாத்தூர பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

காலை 7 மணி முதல் மாலை 5 வரை மின் தடை

0 53
kaveri murasu ad

திருச்சி மாவட்டம் துறையூர்: மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 07.10.2025 செவ்வாய்க்கிழமை அன்று துறையூர் 110/22-11 KV மற்றும் புத்தனாம்பட்டி 110/22-11KV துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு (Housing Board), அம்மாப்பட்டி, முத்தையம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, CSI, பெருமாள்மலை சித்திரப்பட்டி,கொத்தம்பட்டி அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டிஇ புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், T.களத்தூர், புலிவலம்,தேனூர் பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும், மேலும் அன்றைய தினத்தில் 110KV ஜம்புநாதபுரம் – துறையூர் அதிஉயர்மின் அழுத்த பாதையில் மின்தட கம்பி மாற்றும் பணிகள் துறையூரில் இருந்து மின்கோபுரம் 1,2,3 -களில் பொது நிர்மான வட்டம் திருச்சி அவர்களால் நிறுவ இருப்பதால் சித்திரப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் உயர்மின் அழுத்தமின்பாதை,தாழ்வழுத்த மின்பாதை மற்றும் மின் இணைப்பு Service Wire -களை கழற்றி மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.