
உப்பிலியபுரம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழகம் இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரச்சாரம் கூட்டம்
0 19

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 20 7 2025 அன்று மாலை பாலகிருஷ்ணம்பட்டி விஸ்வாம்பாள் தெற்கு மாரியம்மன் கோயில் வளாகத்தில்
திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன்,பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழக செயலாளர் வெள்ளையன், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ ஆர் கே கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை கழகப் பேச்சாளர் மணப்பாறை காசிராஜன், இளம் பேச்சாளர் ரா. சிந்துநதி ஆகியோர் கலந்துகொண்டு திமுக அரசின் நான்காண்டு கால சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், உப்பிலியபுரம் நகரச் செயலாளர் நடராஜன் பி.மேட்டூர் பேரூராட்சி தலைவர் மேகலா வெள்ளையன், மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகரச் செயலாளர்கள், தலைவர்கள், பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழக நிர்வாகிகள், உப்பிலியபுரம் வடக்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள், பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழக இளைஞர் அணி கோகுல், அரவிந்த், ரா.அரவிந்த், லோகேஷ் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழகம் மாணவர் அணி, மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு செயலாளர் மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கிளைக் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு வரவேற்புரை இளைஞர் அணி அமைப்பாளர் சே. கௌதம்.
நன்றியுரை ஆர்.லோகேஷ் இளைஞர் அணி துணை அமைப்பாளர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு உபசரிப்பு நடைபெற்றது.
0 19